ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் மிர்ச்சி செந்தில். இந்த சீரியலும் இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியும் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து நாம் இருவர் நமக்கும் இருவர், மாப்பிள்ளை என தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் நடித்து வந்தார்.இடையில் செந்தில் தனது மனைவி ஸ்ரீஜா கர்ப்பமானதை அறிவித்து குழந்தை பிறந்ததையும் அறிவித்தார்.
திருமணம் ஆகி பல வருடம் கழித்து குழந்தை பிறந்ததில் அனைவரும் வாழ்த்து கூறி வந்தார்கள்.தற்போது ஷு தமிழில் அண்ணா என்ற தொடரில் செந்தில் கமிட்டாகியுள்ளார். இந்த சீரியலில் செந்தில் நான்கு தங்கைகளுக்கு அண்ணனாக நடிக்கிறார், திருச்செந்தூரில் நடக்கும் கதையாக இந்த சீரியல் உருவாக உள்ளது.
சமீபத்தில் இந்த சீரியலுக்கான பூஜை நடைபெற்று உள்ளது. இதில் செந்திலுக்கு ஜோடியாக நந்தினி சீரியல் புகழ் நித்யா ராம் நடிக்கிறார்.செந்தில் இந்த தொடரில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு ரூ. 28 ஆயிரம் சம்பளம் வாங்க நித்யா ராம் ரூ. 23 ஆயிரம் ஒரு நாளைக்கு வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!