• Sep 20 2024

விக்கியின் போனில் நயனின் நம்பரை எப்படி பதிவு பண்ணி வைத்திருக்கிறார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றார்கள்.இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது.

இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என கடந்த சில மாதங்களாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.

மேலும் குறிப்பாக நயன்தாராவின் அப்பா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோதே விக்கிக்கும் நயனுக்கும் திருமணம் என கூறப்பட்டது. ஆனால் இருவரும் நானும் ரவுடிதான் படத்தை போன்ற ஹிட் படத்தை கொடுத்த பிறகே திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தனர். சமீபத்தில் விக்கி இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

அத்தோடு இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் என 150 பேரை அழைக்க விக்கியும் நயன்தாராவும் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் அத்தனை பேரை அழைத்து வர திருப்பதி தேவஸ்தானம் மறுத்துவிட்டதாம். இதனால் சொன்ன தேதியில் அதாவது ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்திலுள்ள ஸ்டார் ஹோட்டலில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்களாம் என தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் இதையடுத்து உடனடியாக திருமணம் செய்துகொள்ளும் முடிவு செய்தனர் விக்கியும் நயன்தாராவும். திருப்பதியில் தங்களின் திருமணத்தை நடத்த திட்டமிட்ட இருவரும் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஜூன் 9 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள மடத்தில் திருமணம் நடைபெறும் எனும் கூறும் வேளையில் இவர்களை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அது என்னவென்றால் விக்கி நயனின் போன் நம்பரை எப்படி பதிவு பண்ணி வைத்திருக்கிறார் என்ற கேள்வி ஒரு அவார்ட் நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த விக்கி நயன் என்று தான் பதிவு பண்ணி வைத்து இருக்கின்றேன் என கூறியுள்ளார்.ஏன் அப்படி பதிவு பண்ணி வைத்திருக்குறீர்கள் என்ற கேள்விக்கு ஆரம்பத்தில் அவர்களை நான் மீட் பண்ணும் போது அவர்கள் எனக்கு மாம் தான் அதனால் நயன் என்று பதிவு பண்ணி இருந்தேன் அத்தோடு இதுவரை அதை நான் மாற்றவும் இல்லை.போனையும் மாற்றவும் இல்லை என கூறியுள்ளார்.

இந்த விடயம் ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.

Advertisement

Advertisement