கன்னடப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம்வருபவர் நம்ம நடிகர் அர்ஜுன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி,மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம்வருகின்றார்.
தமிழில் இவரது நடிப்பில் வெளியாகிய முதல்வன்,ஜெண்டில்மேன்,ஒற்றன், ஜெய்ஹிந் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. அத்தோடு நடிகர் அர்ஜுன் தற்போது வில்லன் வேடங்களில் நடித்து மாஸ் ஹிட் கொடுத்து வருகின்றார்.
அதேவேளையில் ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் . இந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் பிரேமா பரஹா என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இந்தநிலையில் மீண்டும் நடிகர் விஷ்வவ் செனை கதாநாயகனாக கொண்டு தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகின்றார். இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Listen News!