• Sep 21 2024

விஜய்யின் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்த பிரபல நடிகர்…யார் தெரியுமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தளபதி என ரசிகர்களால் கூறப்படுவதே நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் இவரின் நடிப்பை ரசிப்பதற்கென்றே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது பிற தேசங்களிலும் ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு.

"நாளைய தீர்ப்பு" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் இறுதியாக இவரது "பீஸ்ட்" திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை.

எனினும் தற்போது இவர் "வாரிசு" என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவரது பிறந்த தினமான நேற்று சர்ப்பிரைஸ் ஆக இப்படத்தின் இரண்டாவது, மூன்றாவது லுக் போஸ்டர்கள் வெளியாகி இருந்தன.

அதுமட்டுமல்லாது இவ்வளவு காலமும் வெளிவராத சுவாரசியமான உண்மை ஒன்றும் நேற்றைய தினம் வெளியாகி இருக்கின்றது. அதாவது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய், விஜயகாந்த், கெளதமி, யுவராணி மற்றும் மனோரமா நடித்த அதிரடியான காதல் திரைப்படம் தான் செந்தூரபாண்டி.

இத்திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் தான் நடித்து இருக்காராம். ஏனெனில் இது விஜய்யின் இரண்டாவது திரைப்படம் என்பதால் நம்ம கேப்டன் இப்படத்திற்கு சம்பளமே வாங்கலயாம். மேலும் மக்களின் வரவேற்பை பெற்ற இப்படம் திரையரங்கில் 100 நாட்கள் ஓடியதாகவும் கூறப்படுகின்றது.

செந்தூரபாண்டி படம் குறித்த இந்த சுவாரசியமான தகவல் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே பரவி வருகிறது,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement