• Sep 20 2024

நடிகர் அஜித் யாரையும் சந்திக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?- ரகசியத்தை பகிர்ந்த தயாரிப்பாளர்..

stella / 1 year ago

Advertisement

Listen News!

மே 1 ஆம் தேதி அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான நாள் தான். அஜித்தின் பிறந்த நாளை அஜித் கோலாகலமாக கொண்டாடுகிறாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் இனிப்புகள் வழங்கியும் மேளம் தாளத்தோடு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். இத்தனை அன்பை கொட்டுகின்ற ரசிகர்களை ஏனோ அஜித் இதுவரை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவிக்க முன்வர மறுக்கிறார்.

அதற்கான காரணத்தை அமராவதி பட தயாரிப்பாளர் சோழ பொன்னுரங்கம் தெரிவித்திருக்கிறார். முதன் முதலில் அஜித் அறிமுகமானது தெலுங்கு படத்தில் தான். அமராவதி படத்தில் முதலில் அஜித்திற்கு பதிலாக வேறொரு நடிகரை வைத்து தான் எடுத்தார்களாம். ஆனால் அவரின் நடிப்பு சரி வர இல்லை என்பதால் அந்த படத்தின் இயக்குநர் வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.மேலும் தெலுங்கில் ஒரு பையன் இப்போதுதான் வந்திருக்கிறான், பார்க்க மிகவும் அழகாக இருக்கிறான், வேண்டுமென்றால் அவரை போய் கேளுங்கள் என்று அந்த இயக்குநர் சோழா பொன்னுரங்கத்திடம் கூறினாராம். பொன்னுரங்கமும் அஜித்தைபிரசாத் ஸ்டூடியோவில் சந்தித்து அமராவதி படத்தை பற்றி சொல்லியிருக்கிறார். கேட்டதும் அஜித் முதலில் சம்பளம் எவ்ளோ தருவீர்கள் என்று தான் கேட்டாராம்.


இதை வைத்தே அஜித் பெரிய ஆளாக வருவார் என பொன்னுரங்கம் நினைத்துக் கொண்டு சம்பளத்தை பேசிவிட்டு முன்பணமாக 5000 ரூபாயை அஜித் கையில் கொடுத்தாராம். படப்பிடிப்பும் துவங்கி ஊட்டியில் 45 நாள்கள் முடிந்து திரும்ப வருகையில் எங்க குடும்ப உறுப்பினராகவே அஜித் வந்தார் என்றும் என் மகன் போலவே மாறிவிட்டார் என்றும் பொன்னுரங்கம் கூறினார்.

மேலும் சில தினங்களுக்கு பிறகு அஜித் ஒரு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இனி அஜித் அவ்ளோதான் என்று நினைத்தார்கள். ஆனால் நினைத்தவர்களின் மூஞ்சியில் கரியை பூசினார் அஜித் என்று பொன்னுரங்கம் கூறினார். கஷ்டப்பட்டு மீண்டு வந்து மீண்டும் சில படங்களில் கமிட் ஆனார்.ஆனால் ஏகப்பட்ட இயக்குநர்கள் , தயாரிப்பாளர்களின் வீடு வீடாக ஏறி இறங்கினாராம். நிறைய பேரால் அஜித் அவமானப்படுத்தப்பட்டாராம். அதனாலேயே இப்போது அவர் யாரையும் சந்திக்க மறுக்கிறார் என்று பொன்னுரங்கம் கூறினார். ஏனெனில் அந்த அவமானம் தான் அஜித்திற்கு சினிமான என்ன என்பதை புரிய வைத்தது என்று கூறினார்.


யாரை பார்க்க வேண்டும் பார்க்க கூடாது என்பதை உணர்த்தி விட்டது, அதையும் மீறி சந்தித்தால் தேவையில்லாத பிரச்சினைகளும் சேர்ந்து வருகிறது என்பதையும் அஜித் உணர்ந்திருக்கிறார் என்று பொன்னுரங்கம் கூறினார். அடிப்படையில் அஜித் மிகவும் பண்புள்ள மனிதர் என்றும் இதுவரை யாரையும் நோகடிக்காமல் அனைவரையும் மிகவும் மதிக்கும் பண்புடைய குணம் படைத்தவர் என்றும் பொன்னுரங்கம் கூறினார்.

Advertisement

Advertisement