• Sep 21 2024

நடிகர் அஜித் நேருக்கு நேர் திரைப்படத்திலிருந்து விலகியதற்கு என்ன காரணம் தெரியுமா?- உண்மையைக் கூறிய பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்க மாட்டார்களா என ஏங்கும் ரசிகர்களே இல்லை எனலாம்.

ஆனால் இப்போது அப்படி ஒரு விஷயம் நடக்குமா என்றால் சந்தேகம் தான். காரணம் இருவரின் சம்பளமும் எங்கேயோ உயரத்தில் உள்ளது, அத்தோடு மாஸ் ஹீரோவாக விளங்கும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதென்றால் பெரிய பட்ஜெட்டில் தான் உருவாக்க வேண்டும்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பானது 1997ல் கிடைத்தது. வசந்த் இயக்கத்தில் அஜித்-விஜய் நடிக்க நேருக்கு நேர் என்ற படம் உருவாக இருந்தது. இருவரும் ஒன்றாக நடித்தும் வந்தார்கள்,

ஆனால் இடையில் அஜித் படத்தில் இருந்து வெளியேற அவருக்கு பதில் சூர்யா நடித்தார். இப்படம் குறித்து அண்மையில் நடிகர் தாமு பேசும்போது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டார். அதன்பிறகு டேட்டா? ரேட்டா? எது பிரச்சனை என தெரியவில்லை, உண்மை எதுவும் தெரியாமல் அதைப் பற்றி பேசக்கூடாது என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement