• Sep 20 2024

பிக்பாஸ் வீட்டிலிருந்து டபுள் எவிக்சனில் வெளியேறிய அக்ஷயா மற்றும் ப்ராவோ ஆகியோர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றது. அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பமாகி இந்த நிகழ்ச்சியானது எதிர்பாராத டுவிஸ்டுகளுடன் நடைபெற்று வருகின்றது.18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.

தொடர்ந்து 5 பேர் வைல்ட்காட் என்ட்ரியாக உள்ளே நுழைந்திருந்தனர். இதனை அடுத்து ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறியிருந்த விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் ஆகியோர் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது, யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


மேலும்  கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அக்ஷயா மற்றும் ப்ராவோ ஆகியோர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்ஷயா ஒரு நாளைக்கு ரூபாய் 15,000 வீதம் சம்பளமாக பெற்றுள்ளார். சுமார் 55 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளதால் 8 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.


ப்ராவோ ஒரு நாளைக்கு ரூபாய் 12,000 சம்பளமாக பெற்று வந்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டில் 28-ஆவது நாளில் வைல்கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த நிலையில் 20 நாட்களுக்கு மேல் இருந்ததால் 2.50 லட்சம் அரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement