மணி ரத்னம் இயக்கத்தில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ராவணன்.
இப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார் விக்ரம். அதே போல் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றிய பிரித்விராஜ் பாராட்டுகளை பெற்றார்.
ஆனாலும், இப்படம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என அப்போது விமர்சனம் எழுந்தது. ஆனால், இப்படத்தை தற்போது தலைமேல் தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இப்படம் வெளிவந்து 13ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், படத்தின் முழு வசூல் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 45 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!