ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கும் ஒரு நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி 'மாவீரன்' படம் வெளியானது. மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின், சுனில்குமார், யோகிபாபு, திலீபன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இப்படமானது வெளியான நாள் முதல் சிறந்த வரவேற்பை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக் குவித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த 4 நாட்களில் ரூ.50 கோடி கலெக்ஷனைப் பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளது.
இதனையடுத்து ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் சிவகார்த்திகேயனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அருண் விஜய்யும் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இப்போதுதான் மாவீரன் படத்தைப் பார்த்தேன்.. முழுமையாக ரசித்தேன். சகோதர் சிவகார்த்திகேயன் நீங்கள் உங்களுக்கான கேரக்டரை உணர்ந்து எளிமையா, அழகா நடிச்சிருக்கீங்க. யோகிபாபுவின் காமெடியையும், விஜய் சேதுபதியின் அசசரீ குரலையும் விரும்பி பார்த்தேன். இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
Listen News!