• Sep 20 2024

ரூமுக்குள் இருந்து கதறி அழும் சந்தியா- ஆட்டம் போடும் அர்ச்சனா- சிவகாமி எடுக்கப் போகும் முடிவு என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் ராஜா ராணி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பர்ப்போம்.

சந்தியா ஹால் டிக்கெட் வராத வருத்தத்தில் இருக்க அவருடைய மாமனார் வந்து எல்லாம் நல்லதாகவே நடக்கும் காபி குடிமா என சொல்ல இந்த நேரத்தில் எல்லோரும் ஒன்று கூடி இருக்கின்றனர். சந்தியாவை தேடி அவருடன் படித்த இரண்டு தோழிகள் வீட்டுக்கு வந்து எல்லோருக்கும் ஹால் டிக்கெட் வந்துடுச்சு உங்களுக்கு வரலையா? என கேட்க சந்தியா இன்னும் வரலை என கூற சரவணன் வீட்டுக்கு வந்து ஹால் டிக்கெட் வீட்டில் கொடுத்துட்டேன்னு சொல்றாங்க என கூறுகிறார்.

பிறகு சந்தியா ரூமுக்குள் வருத்தத்தோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சரவணன் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். இந்த நேரத்தில் சந்தியாவின் அண்ணா போன் போட்டு ஹால் டிக்கெட் குறித்து கேட்க உடனே சந்தியா ஹால் டிக்கெட் வராத விஷயத்தை சொல்லி கண்கலங்கி அழுகிறார். எல்லாம் நல்லதாகவே நடக்கும் ஒரு வேலை அப்படி ஹால் டிக்கெட் வரலைன்னா அடுத்த வருஷம் எக்ஸாம் எழுதிக்கலாம் அதுக்காக இன்னும் நிறைய படி என ஆறுதல் கூறுகின்றனர்.

அர்ச்சனா ரூமுக்குள் டான்ஸ் ஆடி சந்தோஷமாக இருக்க அதனைப் பார்த்த செந்தில் ஹால் டிக்கெட் நீதான் எடுத்து ஒளிச்சு வச்சிருக்கியா என கேட்க அர்ச்சனா எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் சந்தியா எக்ஸாம் எழுதல எனக்கு ரொம்ப சந்தோஷம் என கூறுகிறார். பிறகு சரவணன் தூங்காமல் காலில் வருத்தத்தோடு விளாத்திக் கொண்டிருக்க அப்போது வந்த சிவகாமி என்ன இன்னும் தூங்காமல் இருக்க என கேட்க சந்தியா ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சாங்க ஆனா அவங்க பரீட்சை எழுத முடியாமல் போன அது ரொம்ப கஷ்டமா இருக்கும் என கூறுகிறார். சரவணன் வருத்தப்பட்டு பேசுவதை பார்த்து சிவகாமியின் முகம் மாறுகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement