• Sep 20 2024

காதல் திருமணம் செய்து கொண்ட ரவீந்தர்...அவரது மகாலக்ஷ்மிக்கு என்ன பரிசு கொடுத்துள்ளார் தெரியுயுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் மியூஸிக்கில் விஜேவாக கெரியரை தொடங்கியவர் விஜே மகாலக்ஷ்மி. பின்னர் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அன்பே வா, மகராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் மகாலக்ஷ்மி.

எனினும் தற்போது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் மகாலக்ஷ்மி. ஏற்கனவே அனில் என்பவரை திருமணம் செய்தார் மகாலக்ஷ்மி. அனிலுக்கும் மகாலக்ஷ்மிக்கும் ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்றார்கள்.



இதனை தொடர்ந்து, சீரியல் நடிகையான ஜெய்ஸ்ரீயின் கணவரும் தேவதையை கண்டேன் சீரியலில் நடிகருமான ஈஸ்வருடன் மகாலக்ஷ்மி ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக ஜெய்ஸ்ரீ குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக தனது கணவர் ஈஸ்வர் மீதும் மகாலக்ஷ்மி மீதும் ஜெய்ஸ்ரீ போலீஸில் புகாரளித்தார்.



இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு  பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ர டெக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்தார் மகாலக்ஷ்மி. திருப்பதியில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் பங்கேற்றனர்.அத்தோடு  திருமணமான தகவலை திருமண கோலத்தில் இருக்கும் போட்டோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அறிவித்தனர்.



மேலும் அதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து மழை பொழிந்து வந்தனர். இந்நிலையில் மகாலக்ஷ்மியும் ரவீந்தரும் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் பிரத்தியோக ஊடகம் ஒன்ற்கு பேட்டியளித்த இருவரும் தாம் எதற்கு எல்லாம் பரிசு கொடுத்துள்ளோம் என்பதை பகிர்ந்துள்ளனர்.இதில் மகாலக்ஷ்மி தனது காதலை உறுதிப்படுத்திய நாள் அன்று ரவீந்தருக்கு யுனிக்கான கிப்ற்கள் கொடுப்பாராம்.அதை தான் தனது ஆபிஸ் முழுவதும் வைத்துள்ளாராம்.அவர் எப்படித்தான் அப்பிடி கிப்ற்றை கொடுப்பாரோ தெரியவில்லை் எல்லாம் அப்படி சூப்பராக இருக்கும் என கூறியுள்ளார்.



இதைக் கேட்ட தொகுப்பாளர்  அப்படியானால் நீங்கள் என்ன கொடுத்துள்ளீர்கள் எனக் கேட்க... நான் இதுவரைக்கும் ஒரு கிப்ட் உம் கொடுக்கவில்லை.நான் திருமணத்திற்கு பிறகே கொடுக்கவுள்ளேன்.அதாவது திருமணத்திற்கு முன் வேறொரு பெண்ணாக இருக்கும் இவங்களுக்கு கிப்ற் கொடுக்க விருப்பமில்லை.எனது மனைவியானதன் பின் யாரும் கொடுக்க முடியாத சிறப்பான கிப்ற் கொடுப்பதாக தான் எண்ணினேன்.கண்டிப்பாக கொடுப்பேன் என கூறியுயுள்ளார்.


Advertisement

Advertisement