• Sep 20 2024

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ் செய்த காரியம்- உடனடியாக சூட்டிங்கை நிறுத்தி விட்டு வெளியேறிய மோகன்லால்- நடந்தது என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் ஒளிபரப்பப்படும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் இந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். தற்போது பல ஆண்டுகாலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.தமிழை போல மலையாளத்திலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 

மலையாளத்தில் நடிகர் மோகன்லால் ஒளிபரப்பாகி இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகின்றது.இந்த நிலையில் போட்டியாளர் ஒருவர் செயலால் பிக் பாஸ் நிகழ்ச்சியை மோகன்லால் பாதியிலேயே நிறுத்தி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


சோசியல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு எல்லோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து மோகன்லால் நிகழ்ச்சியை உற்சாகமாக தொடங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர் அகில் மாறார் தன்னுடைய சக போட்டியாளர்களான ஏஞ்சலினா, சாகர் ஆகிய மீது மோசமான வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.

இதற்காக அவர்களிடம் மோகன்லால் மன்னிப்பு கேட்க சொன்னார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய கேப்டன் பேண்டை சாகரிடம் ஒப்படைக்க சொன்னார். மோகன்லால் சொன்னதற்காக அகில் மாறார்  கேட்டார். பின் தன்னிடம் இருந்த கேப்டன் பேண்டை சாகரிடம் கொடுப்பதற்கு பதில் வீசி எறிந்து இருக்கிறார். இப்படி தன் கண் முன்னே அகில் நடந்து கொண்டது மோகன்லாலுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


இதனை அடுத்து, நான் ஈஸ்டரை உங்களுடன் கொண்டாடுவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பல மணி நேரம் பயணித்து வந்திருக்கிறேன். தயவு செய்து இந்த லைவை நிறுத்துங்கள் தயவு பயங்கரமாக கத்தி விட்டு மோகன்லால் அங்கிருந்து கிளம்பி இருக்கிறார். அத்தோடு பிக் பாஸ் குழுவையும் அழைத்து மோகன்லால் திட்டி இருக்கிறார். அகில் மற்றும் சாகர் இருவரையும் பிக் பாஸ் அழைத்து பேசி இருக்கிறது. இதனை அடுத்து பிக் பாஸ் குழுவினர் மோகன்லாலை சமாதானப்படுத்தி இந்நிகழ்ச்சியை நடத்த வைத்திருக்கிறது. தற்போது இந்த சம்பவம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement