• Sep 20 2024

செஃப் வெங்கடேஷ் பட் போட்ட எண்பதாயிரம் பெறுமதியான ஷுவை நாசம் செய்த குரேஷி- நடந்தது என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. எனினும் இதன் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்த வாரம் எலிமினேஷன் சுற்று நடைபெற்றது.

குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமான பல நட்சத்திரங்கள் உள்ளனர். குறிப்பாக புகழ், பாலா, ஷிவாங்கி, அஸ்வின், மணிமேகலை எனப் பலரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானதோடு மட்டுமல்லாது படவாய்ப்பினைப் பெற்று நடித்து வருகின்றனர்.


அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர் தான் குரேஷி. கேபிவை என்னும் நிகழ்ச்சியின் மூலம் காலடி எடுத்து வைத்த இவர் தற்பொழுது ரசிகர்களின் பேவரிட் காமெடியனாகவும் வலம் வருகின்றார்.


அந்த வகையில் இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் ஓர் சுவாரஸியமான தகவலைக் கூறியுள்ளார். அதாவது குக்வித் கோமாளி செட்டில் ஒரு நாள் செஃப் வெங்கடேஷ் பட் என்னை கோபப்படுத்திட்டே இருந்தாரு. அதனால் அவர் போட்டிருந்த ஷு மேல எண்ணைய் ஊற்றிட்டேன். அப்பிறம் தான் தெரிஞ்சிச்ச அந்த ஷுவோட விலை எண்பதாயிரம் என்று.

அந்த எண்ணைய் கறை வேற இனிமேல் போகாதாம். அதைக் கேட்டு எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. அப்பிறம் என்ன அவர் அடி கொடுத்தாரு. அதை வாங்கிக் கட்டிக் கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement