• Sep 20 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கப் போவது என்ன தெரியுமா?- அதுவும் யாருக்கு தெரியுமா?- செம குட் நியூஸ் ஆச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகள் சேர்ந்து வாழும் கூட்டுக்குடும்பத்தில் நிகழும் பிரச்சினைகளை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இந்த  சீரியலில் அண்ணன்-தம்பிகள் ஜோடிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது கதிர்-முல்லை ஜோடி தான். சித்ரா இருக்கும் முல்லை என்ற கதாப்பாத்திரத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.இப்போதும் கதிர்-முல்லை புதிய ஜோடியையும் மக்கள் கொண்டாடுகிறார்கள்.

குழந்தை இல்லை என அவமானப்படுத்தப்பட்ட கதிர்-முல்லை ஜோடி இப்போது கர்ப்பமாக இருக்கிறார்கள், வளைகாப்பு எல்லாம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


இடையில் கண்ணன் கடன் வாங்கியதால் கதிர் பிரச்சனையில் சிக்கி இப்போது எல்லாம் முடிந்து மூர்த்தி, கதிர், கண்ணன் 3 பேரும் சேர்ந்துவிட்டனர்.கண்ணன் பிரச்சனை தீர அடுத்து என்ன நடக்கப்போகிறது கதையில் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

இப்படியான நிலையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது  கதிர்-முல்லை இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டு இருக்கும் போது  சில ரவுடிகளால் கர்ப்பமாக இருக்கும் முல்லை தாக்கப்படுகிறாராம். உடனே கதிர் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க போராட்டத்திற்கு பிறகு அவருக்கு பெண் குழந்தை பிறக்கிறதாம்.இந்த எபிசோடு செய்தி வெளியாக ரசிகர்கள் குழந்தையை காண ஆர்வமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.. 


Advertisement

Advertisement