திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் பிரபலமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 57.தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் மிகவும் பிரபலமானவர்.அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.
நடிகராகவும் இயக்குநராகவும் ஆவதற்கு முன்பு, ராஜ்கிரண், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.வளசரவாக்கத்தில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் தானே போய் சேர்ந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவருடைய இழப்பு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த சீரியலில் ஏம்மா ஏய் என்று இவர் சொன்ன வசனம் ரசிகர்களிடம் மிகவும் வைரலாகியது.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்துவுடன் நடித்த கமலேஷ் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் பேசம்போது, மாரிமுத்து அவர்களுக்கு சந்தோஷம் கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.அதன்மூலம் அவர் மிகவும் பிரபலமாக, அவரை வைத்து வந்த மீம்ஸ் எல்லாம் அவருக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது என்று கூறியுள்ளார்.
Listen News!