• Sep 20 2024

மாவீரன் படத்திற்காக சிவகார்த்திகேயனின் மனைவி கொடுத்த அன்புப் பரிசு என்ன தெரியுமா?- சூப்பர் மேடம் நீங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன்.சின்னத்திரையில் துவங்கிய இவரது பயணம் தற்போது வெள்ளித்திரையில் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது.

மெரினா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் படிப்படியாக உயர்ந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். படத்திற்கு படம் வசூலில் சாதித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தின் மூலமும் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


மண்டேலா என்ற படத்தை இயக்கிய அஸ்வினின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாவீரன். அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் மிஸ்கின் வில்லனாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சரிதா ஆகியோரும் நடித்துள்ளனர்.இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்றுதான் சொல்லவேண்டும்.

 என்னதான் மாவீரன் திரைப்படம் கமர்ஷியலாக இருந்தாலும் அதிலும் வித்யாசத்தை இயக்குநர் காட்டியுள்ளார். குறிப்பாக ஆடிப்பாடி சிரித்து கலகலவென நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்படத்தில் சற்று சீரியஸான ரோலில் நடித்துள்ளார். எந்த வித பெரிய குறையும் இல்லாத அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும்படி மாவீரன் படம் அமைந்துள்ளது.

 இந்நிலையில் நேற்று வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவருகிறது.நேற்று முதல் நாளில் மட்டும் மாவீரன் திரைப்படம் கிட்டத்தட்ட 10 கோடிவரை வசூலித்துள்ளதாம். இனி வரும் நாட்களில் மாவீரன் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


இந்நிலையில் மாவீரன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தன் மனைவியுடன் திரையரங்கிற்கு வந்து பார்த்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இதையடுத்து தன் ஒவ்வொரு படத்திற்கும் சிவகார்த்திகேயன் ஒரு சென்டிமென்டை பின்தொடர்வாராம். அதாவது சிவகார்த்திகேயனின் படம் வெளியாகும் முதல் நாளில் அவரது மனைவி ஒரு புது ஷர்ட் ஒன்றை வாங்கி தருவாராம். 

அந்த ஷர்ட்டை போட்டுக்கொண்டுதான் சிவகார்த்திகேயன் தன் படத்தின் FDFS காட்சியை பார்க்க வருவாராம். இதை அவர் பல வருடங்களாக பின்தொடர்ந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement