வ.கௌதமன் இயக்கி அவரே கதை நாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் அவருடன் இணைந்து சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர். அத்தோடு கதாநாயகியாக புதுமுக நடிகை ஒருவர் நடிக்கின்றார்.
இப்படமானது பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வருகின்றது. இப்படத்தினுடைய முதற்கட்ட படப்பிடிப்புக்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது.
இந்த படத்திற்கு முதலில் 'மாவீரா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 'மாவீரா படையாண்டவன்' எனத் திடீரென பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Listen News!