தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் வரலாற்று சிறப்புமிக்க படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் திகதி பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ளது.
மேலும் இப்படத்தில் பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ள நிலையில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் , திரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் கதபாத்திர அறிமுக போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகர் கார்த்தி வந்தியதேவனாக நடித்துள்ளார். வரலாற்று நாவலின் படி வல்லவராயன் வந்தியதேவன் என்பவர் வாணர் குல இளவரசனும் துணிச்சலான சாகசம் மற்றும் போர் வீரனாக இருந்துள்ளார். அதுமட்டுமல்லாது இவர் நகைச்சுவை திறன் மிகுந்தவராகவும் வரலாறுகளில் சித்தரிக்கப்படுகிறார்.
இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள கார்த்தி குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கார்த்தி பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் நமது வரலாறு பற்றி அறியாமல் இருப்பது குறித்து நடிகர் கார்த்தி அருமையாக பேசியுள்ளார். அத்தோடு நம் நாடு எப்படி இருந்திச்சு? நம் மன்னர்கள் எப்பிடி இருந்தார்கள்? என்பது கூடி நமக்கு தெரியாது எனவும் மிகுந்த வருத்தத்தோடு அவர் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- சூரியின் இடத்தைப் பிடித்த வேறொரு காமெடியன்… இப்படி ரூட் மாறீட்டீங்களே!
- ஜெயம் ரவியின் காதலி யார் தெரியுமா?…கண்டுபிடித்த ரசிகர்கள்
- “மணிரத்னம் சேர் தான் 30 வருடங்களாக எனக்கு பாஸாக இருந்து வருகின்றார்”…நெகிழ்ந்து பேசிய பிரபலம்
- படத்தோட டைட்டிலே செமயா இருக்கே; யாரோட படம் தெரியுமா?
- பார்த்திபன் மீது தொடரப்பட்ட வழக்கு; உடன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!