தமிழ் சினிமாவில் கே.பாக்யராஜ் தற்போது வரை முக்கிய இடத்தில் உள்ளார்.இவர் இயக்குநர், நடிகர், எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒரு பிரபலம்.
இவருக்கு ஆரம்ப கட்டத்தில் பெரிய ஹிட் கொடுத்த படம் முந்தானை முடிச்சு. அதன்பின்னர் பாக்யராஜ் அவர்களின் திரைப்பயணம் உச்சத்தை எட்டியிருந்தது.
இவர் முதலில் பிரவீணா என்பவரை 1981ம் ஆண்டு திருமணம் செய்தார், அவர் உடல்நலக் குறைவால் உயிரிழக்க பின் 1984ம் ஆண்டு நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்துகொண்டார்.
இவர் பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய பாக்யராஜ் தன் மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யாவை சினிமாத்துறையில் அறிமுகப்படுத்தினார்.
சாந்தனு ஆரம்பித்த சினிமா வாழ்க்கையை போன்று சரண்யாவிற்கு சினிமா வாழ்க்கை எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். ஒருசில படங்களில் நடித்த சரண்யா வெளிநாட்டில் படித்த போது காதலர் ஏமாற்றிவிட்டதால் தற்கொலை முயற்சி செய்தார்.
ஒருமுறை அல்ல பல முறை தற்கொலை முயற்சி செய்த சரண்யாவை பாக்யராஜ் குடும்பத்தினர் ஆறுதல் படுத்தி காப்பாற்றினர். இதனால் வெளியில் தலைக்காட்டாமல் குடும்ப விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு வந்தார் சரண்யா. 37 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.
தற்போது ஆடை, அணிகலன் சம்பந்தப்பட்ட ஷாப்பிங் மற்றும் ரீரைல்ஸ் தொழிலை செய்து வருகிறார். அவர் சமீபத்தில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படமும் இணையத்தில் பகிர்ந்துள்ளார் சரண்யாவின் தம்பி சாந்தனு.
Listen News!