தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படமே 'பொன்னியின் செல்வன்'. இவரின் கனவு திரைப்படமான இப்படமானது செப்டெம்பர் 30-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடியது.
திரைப்பிரபலங்கள் பலரும் நடித்துள்ள இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக த்ரிஷாவும், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், பெரிய பழுவேட்டயராக சரத்குமாரும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜும், ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராமும் நடித்து அசத்தியிருந்தனர்.
மிகப்பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு, மற்றும் சிறந்த விமர்சனங்களும் கிடைத்த நிலையில் வசூலிலும் மாஸ் காட்டி சாதனை நிகழ்த்தி இருந்தது
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது. இந்நிலையில் தற்போது லைகா தயாரிப்பு நிறுவனம் போட்ட ஒரு டுவிட் ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதாவது அந்தப் பதிவில் இன்று மாலை முக்கியமான ஒரு அப்டேட் வெளியாகும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அது என்னவாக இருக்கும் என யோசித்து வந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கண்டிப்பாக பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதியைத் தான் அறிவிக்கப் போகிறார்கள் எனக் கூறி வருகின்றனர்.
Listen News!