• Sep 21 2024

சூப்பர் சிங்கர் பைனல் ஷோவில் கலந்து கொண்ட பாடகி ஜொனிஷா காந்தி- மா.கா.பா ஆனந்த் என்ன செய்துள்ளார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ரசிகர்களைக் கவர்ந்த முக்கியமான ஷோ தான் சூப்பர் சிங்கர்.

இந்த நிகழ்ச்சியில் ஜுனியர்களுக்கான 8 வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கிராண்ட் பிஃனாலே லைவ்வில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் பிரபல பாடகரான யுவன் சங்கர் ராஜாவும் பாடகி ஜொனிஷா காந்தியும் இணைந்துள்ளனர். அப்போது ப்ரியங்கா இந்த நிகழ்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஜொனிஷாவிடம் கேட்ட போது எனக்கு இந்த நிகழ்ச்சியை ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த செட்டுக்கு வந்ததை நான் பெருமையாக நினைக்றேன் என்றும் ஆங்கிலத்தில் கூறினார்.

மேலும் மா. கா. பாவிடம் ஒரு பாட்டுப் பாடும் படியும் சொல்கின்றார். அதன் படி அவரும் “வளையோசை கலகலவென“ என்னும் பாடலை ஜொனிஷாவுக்காக பாடி அசத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement