பாடகி அனுராதா தனது 6 வயதிலேயே அவரது இசைப் பயிற்சியை ஆரம்பித்தவர். இதன் பின் கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள் என்று அனைத்திலும் அனுராதா பங்கு பெற்றிருந்தார்.
ஏ.ஆர். ரகுமானின் பம்பாய் திரைப்படத்தில் இடம்பெற்ற மலரோடு மலரிங்கு என்ற பாடலை குரூப் பாடகராக பாடி சினிமாவிற்கு அறிமுகமானார் அனுராதா.
அதன்பின்னர் மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
அத்தோடு தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.
தற்போது அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அதிகம் பங்குபெற்று வரும் இவருக்கு தனிரசிகர் பட்டாளமே உள்ளது.
இவரது கணவர் பெயர் ஸ்ரீராம் பரசுராம், இவர் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகராவார்.
இதோ பாடகி அனுராதா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள்...
Listen News!