தமிழ் ,தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்தவர் தான் ரேணுகா மேனன்.
இவ்வாறு அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர் 2006 ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார்.இவ்வாறு திருணம் ஆகிய பின் இவர் நடிப்பதை இடை நிறுத்தி விட்டார்.
இவருக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கலிபோர்னியாவிலேயே செட்டிலாகிவிட்டார் எனக் கூறப்படுகின்றது.
அதாவது 15 வருடங்களுக்கு மேல் அங்கேயே இருக்கும் இவர் அங்கே நடனப்பள்ளி ஒன்றையும் நிறுவி நடாத்தி வருகிறாராம்.
இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வரும் நிலையில் ஒரு தகவலும் பரவி வருகின்றது.
அதாவது இவரை மீண்டும் நடிப்பீர்களா..? என்று கே ட்டதற்கு நான் நடிக்க மாட்டேன் எனக் கூறிவிட்டாராம்.அதுமட்டுமல்லாது டெலிவிஷன் நிகழ்ச்சி நடத்த தொகுத்து வழங்க பல வாய்ப்பு கிடைத்தும் அதையும் ஏற்றுக் கொள்ளவில்லையாம்.அது ஏன் மறுப்பு தெரிவித்தார் என்றால் சினிமாவில் மிகுந்த ஈடுபாடோ, எதிர்பார்ப்போ எதுவும் இல்லை. இந்த வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கூறியுள்ளாராம்.
Listen News!