விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.
விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார்.
பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார்.
அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தின் ப்ரோமோஷன் தற்போது துவங்கியுள்ளது.
பிரபல ஜோதி திரையரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று துணிவு படத்தின் மிகப்பெரிய பேனர் ஒன்றை வைத்தனர். சமூக வலைத்தளத்தில் காட்டுதீபோல் பரவிய இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் விஜய் சற்று கடுப்பாகி உடனடியாக தனது வாரிசு படத்தின் பெரிய பேனரை சத்யம் திரையரங்கத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளாராம்.
Listen News!