உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேவரெட் டிவியாக உள்ளது விஜய். இதில் அவர்களை கவரும் வண்ணம் மிகவும் ஜாலியான ஷோக்கள், திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி என இதில் நிறைய நிகழ்ச்சிகள் உள்ளன.
மேலும் அதில் ஒன்று தான் சூப்பர் சிங்கர், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என மாற்றி மாற்றி நிறைய சீசன்கள் ஒளிபரப்பாகி உள்ளன.
இவ்வாறாக கடைசியாக சிறுவர்களுக்கான சீசன் முடிவடைந்தது, இப்போது பெரியவர்களுக்கான நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்தோடு வரும் நவம்பர் 19ம் தேதி மாலை 6.30 மணிக்கு முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாம்.
எனினும் அதற்கான ப்ரமோக்கள் எல்லாம் ஏற்கெனவே ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஆடிஷனின் போது நடந்த கலகலப்பான நிகழ்வுகளை முதலில் காட்ட இருக்கிறார்கள்.
அதற்கான ப்ரமோக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
Listen News!