தமிழ் சினிமாவில் மாநகரம் என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் லோகேஷ் கனகராஜ்.
இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், அவரை சிறந்த இளம் இயக்குநர்களில் ஒருவராகவும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது.
இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார்.இப்படம் வேற லெவலில் வெற்றியும் பெற்றது.இதன் பின்னர் கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான விக்ரம் படத்தை இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி இருந்தது.அடுத்தடுத்து ஹிட் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் வேற லெவலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இவரின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட்டை தான் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் லத்தி படத்தின் விழாவுக்கு வந்திருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தளபதி 67 படம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.குறிப்பாக, "தளபதி 67 படத்தின் பூஜை முடிந்து விட்டது. படப்பிடிப்பு எப்போ தொடங்கும்?" என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "இந்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவித்த பிறகு நான் பேசுவது சரியாக இருக்கும். வாரிசு படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகிறது. வாரிசு ரிலீஸிக்கு பிறகு போதும் போதும் என்ற அளவிற்கு தளபதி 67 அப்டேட் வரும்". என லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!