இந்த வருடம் செப்டம்பர் மாதம் 30ம் திகதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரிக்கின்றன.இந்தப் படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்திலிருந்து பொன்னி நதி மற்றும் சோழா சோழா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் டுவிட்டரில் ஒரு ரசிகர் ரஹ்மானிடம், "கிங் ரஹ்மான் சார், ஸ்ரேயா கோஷல் குரலில் பொன்னியின் செல்வன் படத்தின் பாடலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிடுங்கள்" என கேட்டார். அதற்கு பதில் அளித்த ரஹ்மான், "செப்டம்பர் முதல் வாரம் வரை பொறுத்திருங்கள்" என பதில் அளித்துள்ளார்.
இந்த டுவீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அத்தோடு இந்தப் பாடலின் வருகைக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Listen News!