தமிழ் சினிமாவில் பிரபலங்களில் ஜோடி சேருவது ஒன்றும் இப்போது ஆரம்பித்த வழக்கம் இல்லை.எனினும் அந்த காலத்தில் இருந்தே சினிமாவில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வார்கள்.
இந்த லிஸ்றில் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா, நயன்தாரா-விக்னேஷ் சிவன் என பலர் உள்ள நிலையில் தற்போது இணைந்துள்ளார்கள் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன்.
மேலும் இவர்கள் இருவரும் தங்களது திருமணத்தை மிகவும் சிம்பிளாகவே முடித்துள்ளனர். திருமணம் கடந்த நவம்பர் 28ம் தேதி சென்னையில் கோலாகலமாக நடந்தது.
திருமண செய்த ஜோடியை நேரில் சந்தித்து பல பிரபலங்கள் வாழ்த்து கூறி இருந்தார்கள்.
இவ்வாறுஇருக்கையில் திருமணம் முடிந்த நிலையில் மஞ்சிமா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவரிடம் ஹனிமூன் எங்கே என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், கௌதம் நடித்துவரும் பத்துதல பட வேலைகள் எல்லாம் உள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது ஹனிமூன் செல்ல முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Listen News!