• Sep 20 2024

கணவன் மற்றும் பிள்ளைகளுடன் மணக்கோலத்தில் ரம்பா... எங்கு சென்றுள்ளார் தெரியுமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

90களில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி எனப் பல மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


ரசிகர்களால் 'தொடையழகி' என இன்றுவரை சிறப்பாக அழைக்கப்பட்டு வருகின்றார். இவரின் நடிப்பிற்கும், கவர்ச்சியான அழகிற்கும் என்றே அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது.


அதுமட்டுமன்றி விஜய், சத்யராஜ், சரத்குமார், முரளி எனப் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கின்றார்.


இவ்வாறாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வந்த அவர் 2010-இல் இந்திரகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். 


நடிப்பிற்கு ஓய்வு கொடுத்த ரம்பா சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஆக்டிவாக இருந்து வரும் ரம்பா தனது குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில் சமீபத்திலும் தனது கணவன், மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து திருமண நிகழ்வொன்றிற்குச் சென்றிருக்கின்றார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியிருக்கின்றார்.  அத்தோடு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் பதிவொன்றினை இட்டிருக்கின்றார்.


இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement