தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்குமே கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அஜித்-விஜய் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தாலும் அவர்களின் ரசிகர்களுக்கு இடையில் யார் பெரிது என்ற வாதம் அடிக்கடி இடம்பெற்று வருவது வழமை.
அந்தவகையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் 'வாரிசு' படமும் அஜித்தின் 'துணிவு' திரைப்படமும் வெளியாகி இருந்தது.
இந்த இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்று வருகின்றன. இதில் குறிப்பாக துணிவு படம் முதல் நாளில் இருந்து வசூலில் தாறுமாறாக பட்டையை கிளப்பி வருகிறது. ஆனால், விஜய்யின் வாரிசு படமோ தமிழகத்தில் துணிவு படத்தை விட சற்று பின்தங்கியே தான் இன்றுவரை இருந்து வருகிறது.
அந்தவகையில் பல இடங்களில் வாரிசு படம் தோல்வியை தழுவியுள்ளது என்று தான் ஒரு சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் முக்கிய இடங்களில் ஒன்றான திருச்சியில் வாரிசு திரைப்படம் தற்போது மோசமான வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.
அதாவது திருச்சியில் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப் 10 லிஸ்டில் 8-ஆவது இடத்தை பிடித்துள்ளது.. ஆனால் துணிவு திரைப்படமானது நல்ல வரவேற்பை பெற்று தற்போது வாரிசு படத்தை விட அதிகமாக வசூல் செய்து 6-ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக திருச்சியில் வாரிசு, மற்றும் துணிவு ஆகிய இரு திரைப்படங்களினதும் வசூல் நிலைமை அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!