• Sep 20 2024

நடிகர் விஜய்யின் மகன் தனது முதலாவது படத்தில் கதாநாயகனாக யாரைத் தெரிவு செய்துள்ளார் தெரியுமா?- விஜய்யை வைத்து இயக்கமாட்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய், தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய ஹீரோவாக, ஏராளமான ரசிகர்களை கொண்டவராக கொண்டாடப்படுகிறார். அவரது படங்கள் சொதப்பலாகவே இருந்தாலும், அந்தப் படம் வசூல் சாதனை படைத்துவிடும். அந்த அளவிற்கு அதிகமான ஃபேன் பேஸ் கொண்டவராக விஜய் காணப்படுகிறார். 

இவர் தற்போது  லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ள நிலையில், வரும் அக்டோபர் 19ம் தேதி இந்தப் படத்தின் ரீலீசுக்காக தற்போது முதலே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அக்டோபர் 5ம் தேதி படத்தின் இசை வெளியீடு நடக்கவுள்ள நிலையில், அடுத்ததாக தளபதி 68 படத்திற்காக வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளார்.


இந்த நிலையில் விஜய்யின் மகனான  ஜேசன் விஜய், தற்போது தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். முன்னதாக குறும்படம் இயக்கி, தன்னை நிரூபித்த அவர், தற்போது லைகா நிறுவன தயாரிப்பில் புதிய படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டிருந்தது.

 இந்நிலையில், ஜேசன் சஞ்சய் குறித்து, அவரது தாத்தாவும், விஜய்யின் அப்பாவுமான இயக்குநர் எஸ்ஏசி கொடுத்த பேட்டியொன்று தற்போது வைரலாகி வருகிறது.அதில் அவரது பேரன் இயக்குநராகவுள்ளதாக கூறிய நிலையில், உனக்கென்னடா, நீ டைரக்ட் செய்ய நினைத்தால் பெரிய நடிகர் உன் வீட்டிலேயே உள்ளார் என்று தான் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


அவரை வைத்து எடுத்தால் படம் ஓடிவிடும் என்று தான் கூறிய நிலையில், அதற்கு பதிலளித்த சஞ்சய், இல்லை தாத்தா, விஜய் சேதுபதிதான் தன்னுடைய முதல் ஹீரோ என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார். தான் இயக்குநராக தன்னை நிரூபித்த பின்பே, அப்பாவை வைத்து படமியக்கும் சஞ்சய்யின் தன்னம்பிக்கையையும் எஸ்ஏசி சுட்டிக் காட்டியுள்ளார். அந்த பேட்டியில் இதுதான் தன்னுடைய ரத்தம் என்றும் சஞ்சய் குறித்தும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement