நடிகர் சூர்யா இன்று தனது 48 வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.இவருக்கு திரையுலகப் பிரபலங்கள் ரசிகர்கள் எனப் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.தற்பொழுது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நடிகை ஜோதிகாவை காதலித்த இவர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் இருக்கிறார்கள். தன் பிள்ளைகளின் முதல் எழுத்துகளை சேர்த்து 2டி என்டர்டெயின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். அந்த நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வழங்கி வருகின்றார்.
இந்த நிலையில் சூர்யா பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூர்யாவுக்கு தன் தந்தை வழியில் நடிகராக வேண்டும் என்கிற ஆசை இருந்தது இல்லை. நான் வளர்ந்த பிறகு இயக்குநராகப் போகிறேன் என்று சிறு வயதில் கூறி வந்திருக்கிறார் .
சென்னையில் இருக்கும் லயோலா கல்லூரியில் பி. காம். படித்து முடித்த பிறகு கார்மென்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். தன் முதல் சம்பளத்தை வைத்து அம்மாவுக்கு சேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!