தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இறுதியாக அண்ணாத்த என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தனது 169 படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அப்படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இவருக்கு சூப்பர் ஸ்டார் என்று பெயர் வருதற்கு என்ன காரணம் என்று தகவல் என்று வெளியாகியுள்ளது. அதாவது இவருக்கு அண்ணாமலை என்ற படத்தில் தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இப்படம் ரிலீஸாகி 30 ஆண்டுகள் ஆனதை கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி ரசிகர்கள் கொண்டாடினார்கள். அத்தோடு இப்படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா சூப்பர் ஸ்டார் டைட்டில் பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
திரையில் ரஜினியை பார்த்தாலே ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதனால் படத்தின் துவக்கத்திலேயே அந்த மகிழ்ச்சி ஆரவாரத்தை கொண்டு வர விரும்பினேன்.
இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கிற டைட்டில் கார்டை டிசைன் செய்தேன். படத்தின் துவக்கத்தில் எனக்கு இவ்வளவு பெரிய பில்ட்அப்பா, தற்பெருமை போன்று இருக்கிறது என்றார் ரஜினி.
அந்த படத்தை தயாரித்த கே. பாலசந்தர் தான் ரஜினியை சமாதானம் செய்து அந்த சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டை பயன்படுத்துமாறு கூறினார். அன்றில் இருந்து இன்று வரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த டைட்டில் கார்டு அது தான் என்றார்.ரஜினியும், சுரேஷ் கிருஷ்ணாவும் முதல்முறையாக சேர்ந்து பணியாற்றிய படம் அண்ணாமலை. அதன் பிறகு அவர்கள் கூட்டணியில் வீரா, பாட்ஷா, பாபா ஆகிய படங்கள் வெளியாகின.
அதில் பாட்ஷா தான் கமர்ஷியல் படங்களுக்கு புது லெவலை செட் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- இவர்களால் தான் நான் எப்போதும் புடவை அணிகிறேன் – முதன் முதலில் உண்மையை கூறிய சாய் பல்லவி
- புதுப்படத்துக்காக கெட்டப் மாற்றிய சிவகார்த்திகேயன்-அட இவரா அவர்…!
- பாரிஸில் ரசிகர் ஒருவருக்கு அஜித் செய்த செயல்-வைரலாகும் வீடியோ..!
- சமூக ஊடகங்களில்
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!