• Sep 20 2024

ரஜினியுடன் நடித்து விட்டு அடுத்த நொடி இறந்தாலும் பரவாயில்லை... உருக்கமாக பேசிய தீவிர ரசிகன்... அவர் யார் தெரியுமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அறிமுக காலம் முதல் இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் இவரைத் தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. அந்தளவிற்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை சகலருக்கும் பிடித்த ஒருவராக இவர் மாறி விட்டார்.

இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே எப்போதும் மாஸாக இருக்கும். அந்தவகையில் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறாக பல படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்ற நம்ம சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் நாட்டில் மட்டுமல்லாது உலகம் பூராகவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இவரின் ரசிகர் ஒருவர் கூறிய விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி வருகின்றது. 

அதாவது Youtubeல் ஒளிபரப்பான 'பிராங்க் ஷோ' ஒன்றின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிஜிலி ரமேஷ். இவர் இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கின்றார். அதுமட்டுமல்லாது இதுவரை 15 படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளாராம்.


பிஜிலி ரமேஷ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவீர ரசிகர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது தலைவர் ரஜினிகாந்த் குறித்து மிகவும் உருக்கமாக பேசி இருக்கின்றார்.

அதாவது "தனது வாழ்க்கையில் ஒரு முறை ரஜினிகாந்துடன் நடித்துவிட்டால் போதும். அடுத்த நொடி இறந்தால் கூட பரவாயில்லை" என்று மிகவும் மன உருக்கத்துடன் பேசியுள்ளார். இதனையறிந்த சூப்பர் ஸ்டாரின் ஏனைய ரசிகர்களும் பிஜிலி ரமேஷின் ஆசை விரைவில் நிறைவேற வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement