தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் அமர்க்களமாக நடந்து முடிந்திருந்தது.இந்த நிகழ்ச்சியில் ஆரம்பித்தில் கலந்து கொண்ட 21 போட்டியாளர்களும் ஒவ்வொரு விதத்தில் திறம்பட இருந்ததால் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு ஒவ்வொரு வாரமும் அதிகரித்த வண்ணம் தான் இருந்தது.
இதனைத் தொடர்ந்து, இறுதியில் அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த நிலையில் இதில் டைட்டில் வின்னராக அசிம் தேர்வாகி இருந்தார்.
அசீம் வெற்றி பெற்றாலும் மற்ற பல போட்டியாளர்களுக்கும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் அங்கீகாரமும், ஆதரவும் கிடைத்திருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது கருத்துக்களை தைரியமாக முன்வைப்பதால் விக்ரமனுக்கு பல ஆதரவு கிடைத்தது.
இருப்பினும் சிலர் இவரை பூமர் விக்ரமன் என்று சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர். இது குறித்து பேட்டி ஒன்றில் விக்ரமனிடம் கேட்டுள்ளனர்.அதற்கு அவர்," 60 களில் பிறந்தவர்களை தான் பூமர் என்று கூறுவார்கள். யாருடைய கருத்து பிற்போக்காக இருக்கிறதோ அவர்களையும் பூமர் என அழைப்பார்கள். ஆனால் இது வரை பிற்போக்கான கருத்துக்களை நான் கூறியதில்லை. சிலர் இந்த பூமர் அர்த்தத்தை தெரியாமல் பேசுகிறார்கள்" என்று விக்ரமன் கூறியுள்ளார்.
Listen News!