தமிழ் சினிமாவில் 80களில் மண்வாசனை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரேவதி. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கை கொடுக்கும் கை, புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தால், உன்னை நான் சந்தித்தேன், போன்ற பல படங்களில் நடித்தார்.
தனது இயல்பான நடிப்பினாலும் துறுதுறுவான பேச்சாலும் ஒரு கைதியின் டைரி, கன்னி ராசி, உதய கீதம், பகல் நிலவு, ஆகாயத் தாமரை, என இன்னும் பல திரைப்படங்களில் நடித்தார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் திரைப்படம் தான் இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.
தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்க முக்கியத்துவம் உள்ள குணச்சித்திரவேடங்களில் நடித்து வருகின்றார்.
இவ்வாறு இருக்கையில் தான் நடித்த மருமகள் என்ற திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுரேஷ் சந்திர மேனன் என்பவரை 1986ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2013ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
நடிகை ரேவதி 2018ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் தனக்கு 5 வயதில் குழந்தை இருப்பதாகவும் அவருக்கு மஹி என பெயர் வைத்துள்ளதாகவும், டெஸ்ட் டியூப் குழந்தை என்றும் அறிவித்தார்.
Listen News!