தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்கள் என்பன பெருதும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.அத்தோடு டி.ஆர்.பியிலும் முன்னணியில் நிற்கின்றது.
அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜா-வே.இந்த சீரியலின் கதையே, தம்பி காதலித்த பெண்ணை அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவர். அண்ணனுக்கு பார்த்த பெண்ணை தம்பி திருமணமும் செய்துக் கொண்டார்.
அதனால், இப்போது வரையிலுமே, காவியாவும் ஜீவாவும் சேர்வார்களா? இல்லை பார்த்திபன் காவியா-வும் சேர்வார்களா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.இப்படி இருக்கையில் அண்மையில் இயக்குநர் தாய் செல்வம் இயக்கி வந்தார். சில நாட்களுக்கு முன், அவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இயற்கை எய்தினார்.
இந்த இழப்பில் இருந்து வருவதே சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. ஈரமான ரோஜா-வே சீரியலில் அடுத்த டைரக்டர் யார்? அதிலும் கடந்த வாரம் டி.ஆர்.பியும் வழக்கத்தை விட அதிகமாக வந்திருந்தது. இந்நிலையில் புதிய இயக்குநர் ஈரமான ரோஜா-வே சீரியலை இயக்கவுள்ளார்.
ஈரமான ரோஜா-வே சீசன் 2 சீரியலின் இணை இயக்குநர் ராஜ சுந்தரம் தொடர்ந்து, இந்த சீரியலை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எப்படியும் இந்த மாற்றத்தை நாம் அக்சப்ட் செய்து தான் ஆக வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!