• Sep 20 2024

காற்றுக்கென்ன வேலி சூர்யா யார் தெரியுமா?- எப்படி இந்த சீரியலில் நடிக்க வந்தார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியலில் சூர்யா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுவாமி நாதன். இந்த நிலையில் இவர் குறித்து தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க..

இவர் 1995ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி பாங்லுாரில் பிறந்திருக்கின்றார்.தஞ்சாவூரைச் சேர்ந்த இவர்கள் குடும்பம் திருச்சில் செட்டிலாகியிருக்கிறாங்க.பின்னத் தன்னுடைய அப்பாவுக்கு பாங்லுாரில் வேலை செட்டானதால் அங்கே தான் சுவாமி நாதரும் படிச்சிருக்காராம்.மெக்கானிக்கல் இன்சினியரான இவர் ஒரு க்பனியில் வேலை செய்திட்டு இருக்கும் போது தான் இவருக்கு மீடியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புக் கிடைத்ததாம்.


இவருடைய நண்பர் இவருடைய அழகைப் பார்த்து எப்பிடியாவது இவரை மீடியாவுக்குள் சேர்த்து விடவேண்டும் என்று எண்ணினாராம். இதனால் இவருக்கு ஒரு பெரிய கம்பனியில் நடிப்பதற்கான ஆடீஷன் போகவும் வாய்ப்புக் கிடைத்ததாம். இதனால் தான் வேலை செய்யும் கம்பெனியில் மேலதிகமாக படிக்கப் போகின்றேன் என்று சொல்லி தான் லீவ் ஆகினாராம்.

மேலும் அந்த ஆடிஷன்ல இவர் செலக்டானதோடு சில படங்களிலும் நடித்தாராம். இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இவருடைய முதல் சீரியலான மிதுன ராசி சீரியல் தானாம். இதனை அடுத்து தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் சீரியல்களில் நடித்து வந்திருக்கிறார்.


இதனை அடுத்து தான் காற்றுக்கென்ன சீரியலில நடிக்க வந்தாராம். ரீப்பிளேஸ்மென்ட்ல நடிக்க வந்ததால் பல விமர்சனங்களையும் சந்தித்தாராம். இதனால் இந்த சீரியலை விட்டு விலகவும் முடிவெடுத்தாராம். பின்னர் சீரியல் குழுவினர் கெஞ்சிக் கேட்டதால் தான் சீரியலில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தாராம்.

இருப்பினும் தொடர்ந்து இவருடைய நடிப்பு இந்த சீரியலை ரசிகர்கள் ரசிக்கவும் ஆரம்பித்தாராம். இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராம். இவருடைய மிகப் பெரிய நடிகராக வரனும் என்பது தான் இவருடைய ஆசையாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement