கனடா மாடல் அழகியான சன்னிலியோன் பாலிவுட்டில் 2012-ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் - 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமாகினார்.சன்னிலியோன் ஆபாச படங்களில் நடித்தவர் என்பதால் அவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என ஆரம்பத்தில் எதிர்ப்புக் கிளம்பியது.
தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த சன்னிலியோன் தமிழில் முதன் முதலில் 2014 ஆம் ஆண்டு வடகறி படத்தில் கேமியோ ரோல் செய்ததன் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தார்.
இதனை அடுத்து தற்பொழுது தமிழில் ஓ மை கோஸ்ட் என்னும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இதில் ஜி.பி.முத்துவும் நடித்துள்ளார். இந்தப்படத்தின் விழா சென்னையில் நடந்தபோது சன்னி லியோன் பட்டுப்புடவையில் விழாவில் கலந்துக்கொண்டார்.
இதனை அடுத்து அவர் தீ இவன் என்கிற படத்தில் நடிக்கிறார். இந்த விழாவுக்காக சென்னை வந்த அவர் விழா மேடையில் பேசும்போது பல விஷயங்களை பேசினார்."நான் எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறேன். அதனால் திரைப்படங்கள் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும்போது பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்கள் பார்ப்பதுண்டு. ஆனால் அது இந்த மொழிதான் என்று இல்லை. கலைக்கு மொழி இல்லை.
தமிழில் எந்த நடிகரை பிடிக்கும் ?என்று கேட்கிறீங்கள். இதுக்கு பதில் சொல்வது ரொம்ப கஷ்டம். சூப்பர் ஸ்டார் ரஜினி எனக்கு பிடித்த ஹீரோ" என்று பேசினார்.ரஜினிகாந்தை நேற்று பிறந்த குழந்தைக்கூட பிடிக்கும். சன்னி லியோனுக்கு பிடிக்காமல் போனால் தான் ஆச்சரியம் என நெட்டிசன்கள் கூறி வருவதையும் காணலாம்.
Listen News!