தென்னிந்திய சினிமாவில் ஆரம்பகாலங்களில் நடித்து வந்த பழம்பெரும் நடிகை தான் KR விஜயா., 1963ம் ஆண்டு கற்பகம் என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு முதல் படமே பெரிய வெற்றியை தேடித் தந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடிக்க ஆரம்பித்த இவர் இதுவரை 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அத்தோடு மலையாளம் தமிழ் ஆகிய மொழிகளில் பல சீரியல்களிலும் நடித்திருக்கின்றார்.
புன்னகை அரசி என அழைக்கப்பட்ட இவர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனுடன் பல படங்கள் நடித்துள்ளார்,10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார்.
பிரபல திரைப்பட தயாாிப்பாளரும், தொழிலதிபருமான சுதர்சன் எம். வேலாயுதம் நாயர் என்பவரை திருமணம் செய்த இவருக்கு ஹேமலதா என்ற மகள் இருக்கிறார். அவருக்கு போட்டோ கிராபி மிகவும் பிடித்த விஷயமாம், தனது இன்ஸ்டா பக்கம் முழுவதும் தான் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
அண்மையில் தனது மகனின் புகைப்படத்தையும் ஷேர் செய்திருக்கிறார்.அந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!