தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியான மங்காத்தா, பிரியாணி ,மாநாடு போன்ற திரைப்படங்கள் ரசிகர்களியே பேராதரவைப் பெற்றிருக்கின்றது.
அதன்படி சிம்பு நடிப்பில் இவர் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான மாநாடு திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
அப்படத்தை தொடர்ந்து அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மதலீலை திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் கூற வேண்டும்.இதனிடையே தற்போது நாக சைதன்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக உள்ளது.இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது.
மேலும் இந்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!