தமிழ் சினிமாவில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான முறைமாப்பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் அருண்விஜய். இதனைத் தொடர்ந்து ப்ரியம் ,காத்திருந்த காதல், அன்புடன், பாண்டவர் பூமி எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இருப்பினும் சில காலத்தின் பின்னர் படவாய்ப்பு இல்லாத காரணத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்ததன் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். பின்னர் கதாநாயகனாக நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
அந்த வகையில் தற்பொழுது அச்சம் என்பது இல்லையே என்னும் படத்தில் நடித்து வருகின்றார். அருண் விஜய்யுடன் 5 சகோதரிகள் கூடப் பிறந்தவர்கள் என்பது யாவரும் அறிந்ததே.அந்த வகையில் இவருடைய அக்காவான அனிதா விஜயகுமாருக்கு இரு பிள்ளைகள்.
அதில் ஒருவர் தான் மகள் தியா. இவர் அண்மையில் தான் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.இந்நிலையில், அனிதா விஜயகுமாரின் மகள் தியா தனது தாய்மாமா அருண் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சில நாட்களுக்கு முன் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!