• Sep 21 2024

ஏம்மா ஏய் என்ற வசனத்தை மாரிமுத்துவுக்கு சொல்லிக் கொடுத்தது யார் தெரியுமா?- அவரே அளித்த சுவாரஸியமான பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் மாரிமுத்து பல படங்களில் நடித்து வருபவர். சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் முக்கியமான கேரக்டரில் மாரிமுத்து நடித்திருந்தார்.

வில்லன் கேங்கில் இருந்தாலும் ரஜினியுடன் இவருக்கு அதிகமான காம்பினேஷன் காட்சிகள் காணப்பட்டது. நடிகர், இயக்குநர் சீரியல் நடிகர் என பன்முகம் காட்டி வந்த மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியல் மூலம் அதன் ஆதி குணசேகரன் கேரக்டர் மூலம் ஏராளமான ரசிகர்களை சமீப காலங்களில் கட்டிப் போட்டுள்ளார்.


இந்தத் தொடரில் இவரது பல வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், ஏம்மா ஏய் என்ற வசனம் இவருக்கான அடையாளமாகவே மாறியது.இன்று காலை டப்பிங் ஸ்டூடியோவில் டப்பிங் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரிமுத்துவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது இறப்பிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநராகவும் கண்ணும் கண்ணும், புலிவால் என இரு படங்களை இயக்கியுள்ளார் மாரிமுத்து. இந்தப் படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில்தான் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக களமிறங்கி கலக்கல் பர்பார்மென்ஸ் கொடுத்து வந்தார்.இந்த நிலையில் இவரது இறப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் தனக்கு ஏம்மா ஏய் என்று சொல்லும் பழக்கம் எப்பிடி வந்தது என்று கூறியுள்ளார். அதாவது மாரிமுத்துவின் அப்பா ஒரு விவசாயியாம். இதனால் இவரும் விசாயம் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றாராம். வயலில் வேலை செய்யும் பெண்களை இவருடைய அப்பா ஏம்மா ஏய் என்று தான் அழைப்பாராம்.

அதனைக் கேட்டுக் கேட்டு தான் தன்னுடைய உள்ளத்திலும் அந்த ஏம்மா ஏய் என்ற வசனம் பதிந்து விட்டதாகவும்,அதனை ஒரு தடவை நந்தினியைப் பார்த்து சொன்னேன். இது அப்பிடியே சீரியல் முழுக்க சொல்ல வேண்டியதாக போய்ட்டு. அப்பா இப்போ இல்லை ஆனால் அவர் தான் எனக்குள் இருந்து இந்த வசனத்தை சொல்ல வைச்சிருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement