பிரமாண்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து போட்டியாளர்கள் தமக்குள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டும் வருகின்றனர். செருப்பால் அடிப்பேன், மூக்கு உடைந்திடும் என பல சர்ச்சைக்குரிய வசனங்களையும் பேசி வருகின்றனர். இது தவிர ஜோவிதாவுக்கும் விசித்திராவுக்கும் இடையில் படிப்பு பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.இதனால் முதல் வாரத்திலேயே அத்தனை பஞ்சாயத்தா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் முதல் போட்டியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. இந்த வாரம் பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா, அனன்யா ராவ், ரவீனா தாஹா, ஐஷு, பாவா செல்லதுரை, யுகேந்திரன் ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் குறைந்த அளவு வாக்குகள் பெற்று அனன்யா ராவ் பிக் பாஸ்ஸில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
Listen News!