விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ஷோவாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி 4. சமையல் ப்ளஸ் நிறைய கலாட்டா என நிகழ்ச்சி கலகலப்பாக இருக்க ரசிகர்களின் ஆதரவும் பெரிய அளவில் உள்ளது.ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இப்போது முடிவை எட்டி வருகிறது.
இதில் யார் வெற்றியாளராக இருப்பார் என ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.மேலும் அண்மையில் இந்த ஷோவிலிருந்து நடுவர் செஃப் வெங்கட் விலகவுள்ளதாக கூறப்பட்டது.ஆனால் இது குறித்த எந்தவொரு அதிகார்ப்பூர்வ அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.
குக் வித் கோமாளி 4வது சீசனின் முதல் Finalist ஆக விசித்ரா தேர்வானார், அவரை தொடர்ந்து சிவாங்கி மற்றும் ஸ்ருஷ்டி தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து இந்த வாரம் வைல்ட்காட் என்ட்ரியாக யார் தேர்வாகினார்கள் என்று ஒளிபரப்பப்படவுள்ளது. இதன்படி தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வைல்ட்காட் என்ட்ரியாக ஆண்ட்ரியான் தேர்வாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!