• Sep 20 2024

ஃபஹத் பாசில் நோ சொன்னால் தனி ஒருவன் 2 திரைப்படத்தில் ஸ்மாட் வில்லனாகப் போவது யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ஜெயம்ரவி. இவரது நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி  ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் தனி ஒருவன். இதனை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார்.கதை, திரைக்கதை, மேக்கிங், பின்னணி இசை என அனைத்தும் தனி ஒருவன் படத்தை ரசிகர்களால் கொண்டாட வைத்தது.

 இன்னொரு பக்கம் சித்தார்த் அபிமன்யூ என்ற வில்லன் கேரக்டரில் அரவிந்த் சாமி செம்ம ஸ்டைலிஷாக கூஸ்பம்ப் பெர்ஃபாமன்ஸ் செய்திருந்தார். தனி ஒருவன் படத்தின் ஹைலைட்டாக அரவிந்த் சாமியின் வில்லத்தனம் அமைந்திருந்தது.இந்நிலையில், தற்போது தனி ஒருவன் 2ம் பாகத்தை இயக்கவுள்ளதாக அண்மையில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டிருந்தார் மோகன் ராஜா


இப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, மோகன் ராஜா மூவரும் இரண்டாம் பாகத்திலும் இணைந்துவிட்டனர்.அதேபோல், தனி ஒருவன் 2 ப்ரோமோவில் "எதிரி தான் உன்னைத் தேடி வருவான்" என ஜெயம் ரவிக்கு லீட் கொடுத்திருந்தார் இயக்குநர் மோகன் ராஜா. இதனால் தனி ஒருவன் 2-வில் வில்லன் கேரக்டர் செம்ம வெயிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அதற்காக அரவிந்த் சாமியை போல இன்னொரு தரமான வில்லனை தேடி வருகிறார் மோகன்ராஜா.அதன்படி அவரின் முதல் சாய்ஸ்ஸாக ஃபஹத் பாசில் இருப்பதோடு, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி ஃபஹத் கமிட்டாகவில்லை என்றால், பாலிவுட்டில் இருந்து அபிஷேக் பச்சனை களமிறக்கலாம் என மோகன் ராஜா முடிவு செய்துள்ளாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement