• Sep 21 2024

பல தடைகளைத் தாண்டி குக்வித் கோமாளி சீசன் 3இன் டைட்டிலை பெற்றது யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய ரியாலிட்ரி சமையல் ஷோ தான் குக்வித் கோமாளி சீசன் 3. இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றானது இன்றைய தினம் பிற்பகல் 3 மணியிலிருந்து ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ருதிகா, தர்ஷன், அம்மு அபிராமி, வித்யூலேகா, கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப் என 6 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

குக்குகள் மற்றும் அவர்களது கோமாளிகள் காம்பினேஷன் முடிந்து, அட்வான்டேஜ் ரவுண்டில் வித்தியாசமான டாஸ்க்கை அவர்கள் எதிர் கொண்டனர். அத்தோடு இரண்டு காம்போ டாஸ்க் நடைபெற்றது. அந்த இரண்டு ரவுண்டிலும் அதிக புள்ளிகளைப் பெற்று குக்வித் கோமாளி சீசன் 3 என்ற டைட்டிலை ஸ்ருதிகா பெற்றுள்ளார்.

அத்தோடு வெற்றி பெற்றுள்ள ஸ்ருதிகாவுக்கு 5 லட்சம் பணத் தொகை வழங்கப்பட்டதோடு அவருடன் கோமாளியாக இருந்த பாலாவுக்கும் புகழுக்கும் ஒரு லட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல இரண்டாம் இடத்தை தர்ஷனும் மூன்றாம் இடத்தை அம்மு அபிராமியும் பெற்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement