தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் இருந்தாலும் அறிமுக இயக்குநர்களுக்கென்று தனி வரவேற்பு ஒன்று உள்ளது. அந்த வகையில் குறுகிய காலத்தில் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நெல்சன் திலீப் குமார். இவர் தளபதி விஜய்யை வைத்து இறுதியாக இயக்கிய பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்த நிலையில் இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் தனது குடும்ப நிலைமையை பற்றி கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர். அதில் அவர் கூறியதாவது எனது அப்பா உடல் நிலை சரி இல்லாததால் படுத்த படுக்கை ஆகி விட்டார்.
அவருக்கு உடல் நிலை சரி இல்லாமல் போனதிலிருந்து நான் தனி ஒருவனாக குடும்பத்தைப் பார்த்து வருகின்றேன். ஆனால் இனிமேல் இந்த ஒரு நிலை வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் எனது ஒவ்வொரு வேலையையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றேன்.
என்னைப் பொறுத்த வரையில் என்னுடைய குடும்பம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதனை யோசித்து தான் சினிமாவிற்கு வந்தேன். இப்போது இயக்குநராக இருக்கின்றேன். அடுத்து ஒரு தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்பது தான் எனது அடுத்த கட்டப் பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறசெய்திகள்:
- படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்
- ஆர். கே. சுரேஷ் நடிப்பில் உருவான விசித்திரன் படத்தின் டிரெய்லர் வெளியிடு…!
- பார்வதியை டார்ச்சர் செய்யும் விக்கி…சந்தியா எடுத்த முடிவு – இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- மறைந்த நடிகை சித்ராவின் பிறந்தநாள்-வைரலாகும் ரசிகர்களின் பதிவு..!
- ஏ .ஆர்.ரகுமான் அமர்ந்து கொண்டு இருக்கும் போதே மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..!
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!