• Sep 20 2024

அதிதி சங்கருக்கு பிறகு கண்ணீர் மல்க அழுது வெளியேறிய கூல் சுரேஷ்... அதுவும் சிம்புவால் ஏற்பட்ட சம்பவத்திற்காக.... ஏன் தெரியுமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று சிறப்பாக போற்றப்படுகின்ற இவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'.

இப்படமானது ஆரம்பத்தில் இருந்து பல்வேறுபட்ட சந்தேகங்கள் மற்றும் விமர்சனங்களுடன் இருந்த நிலையில் சிம்புவின் நடிப்பைத் தாண்டியும் ஏ ஆர் ரகுமானின் இசை இப்படத்திற்கு மக்கள் மத்தியில் சூப்பரான ஒரு இடத்தை பிடித்துக் கொடுத்திருக்கின்றது.


எனினும் சிம்புவின் மிரட்டலான நடிப்பில் உருவான இப்படத்தினுடைய ட்ரெயிலர் ஆனது 'விக்ரம்' மற்றும் 'கேஜிஎஃப்' ஆகிய படங்களை மிஞ்சும் அளவிற்கு வெளியாகி ரசிகர்கள் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. 

இந்நிலையில் தமிழ் சினிமாவில் வெளி வருகின்ற எல்லா படத்திற்கும் விமர்சனம் கூறி இணையத்தை பரபரப்பாக்கி வருகின்ற கூல் சுரேஷ் செய்த ஒரு விடயம் ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது. 


அதாவது இவர் சமீபத்தில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கரை காதலிப்பதாக கூறி சர்ச்சையைக் கிளப்பி இருந்தமை பலருக்கும் தெரியும். பின்னர் இதற்காக தானே மன்னிப்பு கேட்கும் வகையில் வீடியோவை பகிர்ந்து வைரலாக்கினார். 

இந்நிலையில் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு வந்திருந்த கூல் சுரேஷ் பின்னர் கண்ணீர் மல்க அழுது வெளியே வந்துள்ளார். இவர் அழுத்தமைக்கான காரணம் அங்கு வந்த சிம்புவின் ஏராளமான ரசிகர்களாகிய மக்கள் கூட்டமே எனக் கூறப்படுகின்றது. 


மேலும் 'வெந்து தணிந்தது காடு, சிம்புவுக்கு வணக்கத்த போடு' என்ற இவரின் டயலாக் இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் கூல் சுரேஷ் அழுத அந்த வீடியோவும் பரவலாக்கப்பட்டு வருகின்றது.  

Advertisement

Advertisement