தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த அர்ச்சனா அடுத்தகட்டத்திற்கு நுழைந்து சீரியல் நடிகையாக மாறினார்.
இவருக்கு தனிஅங்கீகாரத்தை கொடுத்த சீரியல் என்றால் ராஜா ராணி 2 .இதில் படு மோசமான வில்லியாக நடித்து வந்தார்.
அதனாலேயே ரசிகர்கள் பலரும் அவரை திட்டி வந்தார்கள். ஆனால் அவரோ சீரியலை வெறும் சீரியலாக பாருங்கள் என்று கூறி வந்தார்
சமீபத்தில் ராஜா ராணி 2 தொடரில் இருந்து இவர் விலகியிருந்தார்.இது ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.ஆனால் காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.
மேலும் இந்த நிலையில் அவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, ராஜா ராணி 2 தொடரில் 3 ஆண்டுகளுக்கு மேல் நடித்துவிட்டேன், எனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்து இதில் இருந்து விலகினேன்.
நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உண்மையா, இல்லையா என்பது வரும் நாட்களில் தெரியும், பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்துள்ளார்.
Listen News!